"பொது இடங்களில் குப்பைகளை போட மாட்டோம் ,
குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவோம்".
சுத்தமான வாழ்வே நோயற்ற வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும். அதுபோல் நமது வளர் இளம் நற்பணி சங்க நண்பர்கள் நேரு யுவ கேந்திர எனும் அமைப்புடன் இணைந்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தொடர் வண்டி நிலையம் மற்றும் சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற இடங்களை சுத்தம் செய்யும் பணியில் மிகவும் சிறப்பாக ஈடுபட்டனர்.
இது மட்டுமின்றி காட்டம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு சில சுற்றுப்புற பகுதிகளையும் நமது நண்பர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
அதுபோல் இன்னும் பல இடங்களை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
நமது இடம் நமது வீடு நமது நாடு எனும் எண்ணத்துடன் அனைவரும் செயல் பட வேண்டும்.
No comments:
Post a Comment